கால்பந்து விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினவேல், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் நோயலின் ஜான், மாமன்ற உறுப்பினர் திருமதி விமலா சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்