மகளிர் கல்லூரியில் உலக தாய் மொழி தினம் கொண்டாடபட்டது.
சென்னை ஆத்தியப்பா தெருவில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மொழி துறை சார்பில் உலகத் தாய்மொழி தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடபட்டது.இவ்விழாவில் திருத்தங்கல் நாடார் கல்லூரியின் முனைவர் உதவி பேராசிரியர் ஜோ.சம்பத்குமார் சிறப்பு அழைப்பாளராக வருகைதந்து மொழிநிலை உருவகக் கோட்பாடு குறித்துதலைமை உரையாற்றினார்.விழாவில் தமிழ்மொழி பாடலுக்கு கல்லூரி மாணவிகள் மேடையில் நடனமாடினர்.தெலுங்க, சமஸ்கிருதம் மொழிகளில் பாடல் பாடியும், ஹிந்தியில் கவிதை வாசித்தும் மாணவிகள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
உலகத் தாய்மொழி தினத்தை ஒட்டி தங்களுடைய கைகளில் மாணவிகள் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி சமஸ்கிருதம்,பிரெஞ்சு போன்ற மொழிகளை எழுதி மகிழ்ந்தனர்.விழாவிற்கான முழு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் டி.மோகனஸ்ரீ மற்றும் மொழித்துறை பேராசிரியர்கள் சிறப்புற ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பல்வேறு மொழி பேசும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.