புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டி
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்டப்பேரவ தலைவர் செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாணவ மாணவியர்கள் அச்சமின்றி தேர்வினை எதிர்கொள்ளும் நோக்கில் எக்ஸாம் வாரியர்ஸ் என்ற நூலினை எழுதி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி ஏற்பாட்டின் பேரில் பிரதமர் எழுதிய நூலின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஓவிய போட்டிகள் புதுச்சேரி மாநில பள்ளிகளில் நடைபெற்றது.இந்த ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா தனியார் ஓட்டலில் மதிய உணவோடு நடைபெற்றது.இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி முன்னிலை வகித்தார் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.