அம்மன் திருக்கோவில் திருவிழா தை மாதம் முதல் செவ்வாய் அன்று தொடங்கி பங்குனி உத்திரம் வரை மூன்று மாதங்கள் செவ்வாய்தோறும் நடைபெறும்

Loading

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் திருவிழா தை மாதம் முதல் செவ்வாய் அன்று தொடங்கி பங்குனி உத்திரம் வரை மூன்று மாதங்கள் செவ்வாய்தோறும் நடைபெறும். இந்த ஆண்டும் தை முதல் செவ்வாய் அன்று திருவிழா தொடங்கியது. 6ம் திருநாள்  வடகரை வன்னிய குல சத்திரியர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு காலை 10 மணிக்கு அருள்மிகு உண்மை விநாயகர் திருக்கோவிலிலிருந்து பால்குட தீர்த்தக்குட வீதி உலா நடைபெற்றது. மதியம் 1மணிக்கு முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீர்த்தக்கரக அழைப்பும் அக்னிசட்டி முளைப்பாரி வீதி உலாவும் நடைபெறவுள்ளது. இரவு திருநெல்வேலி மாரியப்பராஜா மற்றும் வடகரை பரமசிவன் குழுவினரின் நைய்யாண்டி மேளத்துடன் ரமேஷ் குழுவினரின் கரகாட்டமும் நடை பெறவுள்ளது. இரவு முப்புடாதி அம்மன் பூரதத்தில் வீதி உலாவும் நடைபெறும் என வடகரை வன்னியர் குல சத்திரியர் சமுதாய நிர்வாகிகளான கணேசன் படையாட்சி, நயினார் படையாட்சி, வேம்புராஜ் படையாட்சி ஆகியோர் நம்மிடம் தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *