சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Loading

மகா சிவராத்திரி விழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
*மகா சிவராத்திரி விழா*தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய சாமிக்கு 4 கால சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண் முழித்து சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு கால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டின் போது பக்தர்கள் திருவாசகம் மற்றும் பக்தி பாடல்கள் பாடினர்.தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் சாமிக்கு பல்வேறு பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 4 கால பூஜையின் போது சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, தயிர் மற்றும் நறுமண பொருட்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டைமொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.*சுயம்பு மாதேஸ்வர சாமி*இதேபோன்று தர்மபுரி வெண்ணாம்பட்டி நந்தி நகரில் உள்ள சுயம்பு மாதேஸ்வர ஸ்வாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 4 கால பூஜையின்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில்விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேச நாதஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *