டேக் பிரத்யங்கிரா’ என்ற பெயரில் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை சென்னை, அறிமுகப்படுத்தியது

Loading

டேக் பிரத்யங்கிரா’ என்ற பெயரில் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை சென்னை, சோழிங்கநல்லூரில் அறிமுகப்படுத்தியது, டேக் டெவலப்பர்ஸ்! மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய லோகோவையும் வெளியிட்டது!
டேக் பிரத்யங்கிரா’-வின்  திட்டத்தின் அறிமுக விழாவை அண்மையில் சென்னையில் நடத்தியது. இதனையொட்டி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய லோகோவையும் வெளியிட்டது.இவ்விழாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  சுஹாசினி மணிரத்னம், எஸ்.பி.ஐ. வங்கியின்  தலைமைப் பொது மேலாளர் ஆர். ராதாகிருஷ்ணா, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் மாண்புமிகு திருமதி புஷ்பா சத்யநாராயணா, சவேரா ஹோட்டல்ஸ்  நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திருமதி நீனா ரெட்டி, மாஃபா ஸ்டிராடர்ஜிக் கன்சல்டன்ட்ஸ்  நிறுவனத்தின் இணை நிறுவனர் திருமதி லதா பாண்டியராஜன், எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மண்டல மார்க்கெட்டிங் தலைவர் திருமதி எஸ். பத்மாவதி ஆகியோர் இணைந்து புதிய லோகோவை வெளியிட்டனர்.இந்நிகழ்வின்போது டேக் டெவலப்பர்ஸின் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான – சோழிங்கநல்லூரில் உருவாக்கப்படவிருக்கும் ‘டேக் பிரத்யங்கிரா’-வை அறிமுகப்படுத்தியது, இந்நிறுவனம். முன்னணி வங்கியாளர்கள், தொழிலதிபர்கள், சேவை வழங்குநர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *