அருள்நிதி ஜோடியாகும் ஆத்மிகா

Loading

அருள்நிதி, ஆத்மிகா நடிக்கும் படத்துக்கு திருவின் குரல் என பெயரிட்டுள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா ராபர்ட் உள்பட பலர் நடித்துள்ள படம் திருவின் குரல். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரிஸ் பிரபு இயக்கியுள்ளார். இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களில் இயக்குனர் அருண்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பேச்சு குறைபாடு கொண்ட கேரக்டரில் அருள்நிதி நடிக்கிறார். அவரது அப்பாவாக பாரதிராஜா நடிக்கிறார். தந்தை மகனுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பை சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *