தீபாவளி ஏல சீட்டு ஜே.பி.ஜோதியை மீண்டும் கைது செய்யக் கோரி அவரது தாயாரை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து போராட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே. பி.ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் தீபாவளி சீட்டுப்பண்டு நடத்தி மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வாழங்குவதாகவும் மாதம் 500 செலுத்தினால் இரண்டு கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து சுமார் 10,000 மேற்பட்ட வாடிக்கையாளரிடம் ரூபாய் 28 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டு பணத்தை வசூலித்து வந்த நிலையில் தீபாவளி நெருங்கியும் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டு பொருட்களை வழங்கப்படாததால் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில் தலைமறைவான ஜே பி ஜோதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் ஜே பி ஜோதி அவரது மனைவி மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் மீண்டும் ஜாமீனில் வெளிவந்துள்ள ஜே.பி.ஜோதியிடமிரு ந்து தங்களது பணத்தையும் பொருட்களையும் பெற்றுத் தருமாறு தாமரைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த ஜே.பி.ஜோதி ஸ்டார் ஏஜென்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜே பி ஜோதியின் தாயாரையும் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வெங்கல் காவல் துறையினர் ஜே பி ஜோதியின் தாயாரை மீட்டு ஆட்டோவில் ஏற்றிய போது பொதுமக்கள் அவரை ஏற்ற விடாமல் மடக்கி பிடித்து ஜே.பி.ஜோதி வரும் வரை அனுப்ப மாட்டோம் என காவல்துறையினிடம் வாக்குவாதம் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் வெங்கல் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏற்கனவே புகார் இருப்பதால் அவரிடமிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.