மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் மகளிர் திட்டம் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் விதமாகவும் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.தமிழ்நாடு நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக பொது இடத்தில் ஒன்று கூடி இணைந்து இலக்கியப் போட்டிகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளது. இப்போட்டியின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், குழுக்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்க வேண்டியும் இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இலக்கியப் போட்டிகளில் ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 927 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்குபெற்று மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக போட்டிகளின் தன்மைக்கேற்ப திட்ட இயக்குநர், உதவித்திட்ட அலுவலர் மற்றும் அந்தந்த பகுதிகளை சார்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் நடுவர்களாக கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் கட்டுரை, கவிதை மற்றும் ஓவியம் என மூன்று போட்டிகளில் பேரூராட்சிகள் அளவில் முதல் மூன்று இடங்களையும், நகராட்சிகள் அளவில் முதல் மூன்று இடங்களையும் மற்றும் மாநகராட்சிகள் அளவில் முதல் மூன்று இடங்களையும் தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் கோ.மலர்விழி, உதவி திட்ட அலுவலர் கல்பனா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *