மிளகாய் பயிரில் பூச்சி தாக்குதலுக்கான மேலாண்மை குறித்த ஆலோசனைகள் :
திருவள்ளூர் பிப் 11 : மிளகாய் பயிரைத் தாக்கும் இலைப்பேன் மற்றும் அசுவின் அசுவினி பூச்சி தாக்குதலை தடுக்கும் மேலாண்மை முறைகள் குறித்து வேளாண்மை திருவூர் அறிவியல் நிலையம் சார்பில் விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் ஆலோசனைகள் வழங்கி விளக்கினர்.பள்ளிப்பட்டு வட்டாரங்களில் ஆய்வு செய்தபோது பொதட்டூர்பேட்டை,பாதிர் வேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மிளகாய் பயிரில் இலைப்பேன் மற்றும் அசுவின் அசுவினி பூச்சி தாக்குதல் பரவலாக காணப்பட்டது.மிளகாயில் இலைப்பேன் பூச்சி தாக்கிய இலைகள் சுருங்கி, செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும். பூ மற்றும் காய்கள் உற்பத்தி தடைபடும். இப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மிகச் சிறியது, மஞ்சள் நிறத்தில் மயிரிழைகளால் ஆன இறகுகளை உடையது.
மேலும் அசுவினி பூச்சி தாக்கப்பட்ட செடிகள் வெளுத்து போய், இலைகள் சுருங்கி காணப்படும். அசுவினி வெளியேற்றும் தேன் துளி கரும்புகைப் பூசணத்தினை ஏற்படுத்தும்.மிளகாய் சாகுபடியில் ஊடுபயிராக அகத்தியை பயிரிட வேண்டும். வெங்காயத்தை ஊடுபயிராக பயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ சாகுபடி செய்யக்கூடாது. மக்காட்சோளம் அல்லது செண்டுமல்லி பயிரை வரப்பு பயிராக சாகுபடி செய்யலாம்.நாற்றுகளில் மேற்பரப்பில் நீரை தெளிப்பதனால் இலைப்பேன்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்தலாம்.ஒரு கிலோ விதைக்கு இமிடாக்லோப்ரிட 70 சதவீதம் ws 12 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து நாற்று விட வேண்டும்.சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்திட மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை ஏக்கரும் 12 எண்கள் வைக்க வேண்டும்.மேலும் வேப்ப எண்ணெய் 3 சதவீதம் தெளிக்கலாம்.தாக்குதல் அதிகம் இருப்பின் பின்வரும் ஏதேனும் ஒரு மருந்தினை தெளிக்கலாம்.இமிடாக்லோப்ரிட 3 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் அல்லது தையக்லோப்ரிட் 21.7 சதவிகிதம் எஸ்.சி 6 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 சதவிகிதம் எஸ் 4 கிராம் 10 லிட்டர் தண்ணீரில் அல்லது பிப்ரோனில் 5 சதவிகிதம் 15 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் அல்லது டைமிதோயேட் 30 சதவிகிதம் இ.சி. 1 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இதில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சி பானுமதி, மற்றும் பூச்சியியல் புவி பேராசிரியர் வி.சி.விஜயசாந்தி, இணை பேராசிரியர் ப.யோகமீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.