வேலூர்முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள்.

Loading

வேலூர் மத்தியசிறையிலிருந்து சிறப்பு தண்டனை குறைப்பு பெற்று அரசின் முன்விடுதலையில் செல்லும் தண்டனைசிறவாசிமறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவுசங்கத்தின்சார்பில்அத்தியாவசிய உணவு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன் விடுதலை செய்யப்பட்ட தருமபுரி மாவட்டம் தருமபுரியை சேர்ந்த தண்டனை சிறைவாசி  ப.கோவிந்தராஜ் த/பெ பழனிச்சாமி பேருக்கு 21 வகையான மளிகை பொருட்கள் அரிசி பருப்பு, புளி கடலை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டனவேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜயராகவலு,  தலைமை தாங்கினார். முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எ.எஸ்.அப்துல் ரஹ்மான் வழங்கினார்.முன்னாள் சிறைவாசிகள் சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன்  அவர்கள் விடுதலையான சிறைவாசிகளுக்கு மறுவாழ்விற்கான உதவிகள் வழங்கினார். இதற்கென நடைபெற்ற நிகழ்வில்பொருளாளர்ஆர்.சீனிவாசன், சிறை நல அலுவலர்ஆர்.மோகன்,  மருத்துவர்உள்ளிட்டோர்பங் கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *