வங்கிகடன் மற்றும் மானியத்துடன் கூடிய வாகனங்களை பெறறு கொண்டு பயன்பெற்று வரும் பயனாளிகள்

Loading

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வசதி மேம்பாட்டு கழகம்
தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது வங்கிகடன் மற்றும் மானியத்துடன் கூடிய வாகனங்களை பெற்று கொண்டு பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது தெரிவித்ததாவது     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாள் முதல், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டிசிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி  மேம்பாட்டு கழகம் தாட்கோ முலம் தொழில் முனைவோர் திட்டம் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம்( கிளினிக்),
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம் நிலம் மேம்படுத்துதல் (இருபாலருக்கும்), துரித மிண் இணைப்பு வழங்கும் திட்டம், இந்திய குடிமை பணி முதன்மை தேர்வு எழுதுவோர்க்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு
தொழில் துவங்குவதற்கு நிதியுதவி,  தமிழ்நாடு தேர்வாணய தொகுதி
1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர் செலவு கணக்கர்,நிறுவன செயலருக்கு நிதியுதவி, என ஆதிதிராவிடர்க ளுக்காக பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலம் 07-05-2021 முதல் 30-12-2022 வரை ,தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 96 பயனாளிகளுக்கு, ரூ.1.18 கோடி மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ்(கிளினிக்)1பயனாளிக்குரூ.2.25 இலட்சம் மதிப்பிலும்,மகளிர் சுய உதவிக்குழுக்கான பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பிலும்,என மொத்தம் 152 பயனாளிகளுக்கு, ரூ.2.20 கோடி மதிப்பில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இத்திட்டங்களின் முலம் பயன்பெற விரும்புவோர்கள்
குடும்ப அட்டை, சாதிசான்று,வருமான சான்று, ஆதார் அட்டை,கல்வி தகுதி சான்றிதழ், கொட்டெஷன் (ஜீஎஸ்டிஎண்)உடன்திட்டஅறிக்கை,ஆகியவற்றினையும்வாகனகடனுக்காக விண்ணப்பிபவர்கள், ஓட்டுநர்  உரிமம்,மற்றும் பேட்ஜ் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, http;application.tahdco.com என்ற இணைய தள முகவரியில்
பதவியேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி தர்மராஜ் அவர்கள் தெரிவித்ததாவது: என் பெயர் தர்மராஜ் நான் உதகை டேவிஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறேன்,நான் விவசாயம் தொழில் செய்து வருகிறேன்,நான் தனி நபர் ஒருவரிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் சொந்தமாக ஒரு லோடு வாகனம் வாங்க முடிவு செய்தேன் இது குறித்து ,என் நண்பர் ஒருவரிடம் பேசிக்
கொண்டிருந்த பொழுது,தாட்கோ மூலம் தொழில்முனைவோர்திட்டத்தின் கீழ் வாகன கடனுக்காக  விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு விண்ணப்பித்து,
சொந்த முதலிடாக ரூ.10,248 செலுத்தினேன்.இதனுடன் வங்கிக்கடன் ரூ.6.19 இலட்சம், தாட்கோ மானியம் ரூ2.25 இலட்சம், என மொத்தம் 8.54 இலட்சம் மதிப்பீட்டில் லோடு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.   இந்த வாகனத்தை கொண்டு எனது தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகளை எடுத்து செல்லவும், வெளி வாடகைக்குசெல்வதால் எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது போன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என தெரிவித்தார்.இச் செய்தியாளர்பயணத்தின் போது தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *