தியாகிகள் தினம் அனுசரிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தியாகிகள் தினம் அனுசரிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியவை மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.*இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்.” என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.இதில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள், நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் செல்வக்குமார், மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், திருமதி. காவேரி, திருமதி. சரஸ்வதி, திருமதி. அந்தோணியம்மாள் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.