திருவண்ணாமலை பேரிடர் மேலாண்மைத் துறை ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ.வேலு தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு மூன்று மாவட்ட வருவாய் அதிகாரிகளுடன் பட்டா மாறுதல், பட்டா வழங்குதல் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கக்கூடிய சாதிச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்தும் ஆலோசனை கூட்டம் விரிவாக நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.இராமச்சந்திரன் கூறுகையில்…திமுக கழக ஆட்சி வந்ததற்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் ஓ ஏ பி உள்ளிட்ட அனைத்து வகை சான்றிதழ்கள் என 18 லட்சத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்கள்ளக்குறிச்சிமாவட்டத்தில்6லட்சத்திற்கும்மேற்பட்டவர்களுக்குசான்றிதழ்வழங்கப்பட்டுள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 45 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியவர், மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் 6400 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் முடிந்தவரை வருவாய் அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை தள்ளுபடி செய்யாமல் 15 தினங்களுக்குள் விரைந்து வழங்க வேண்டும் எனவும்,பட்டா வழங்குதல் பட்டா பிரித்தல் ஈ பட்டா வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும் நிலம் எடுப்பதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் முதியோர் உதவித் தொகையை தள்ளுபடி செய்ய அதிகாரிகள் நினைக்காமல் அதற்கு என்ன தேவை என்பதை அறிந்து மக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமமலைவாழ் மக்கள் பழங்குடியினர் குருமன்ஸ் போன்ற சாதியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடுகள் உள்ளதாகவும் கூறியவர் விரைவில் அந்தந்த மாவட்டங்களில் எந்தெந்த சாதியினர் இருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க உள்ளதாகவும்OBC சாதியினருக்கு சட்டரீதியாக வரும் அனைத்து வருமானமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர் அணியினர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி அடைவோம் என்றும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பட்டா சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், இ சேவை மையத்தில் உள்ள அலுவலர்கள் முறையாக பணிகளை செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.