காவல்துறையினர் ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்

Loading

தமிழக முழுவதும் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில்  காவல்துறை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. மாநில லாரி உரிமையாளர்களை சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ஆன்லைனில் அபராதம் விதிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பாக பயன்படுத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தல்; கூடுதல் அபராதம் விதித்தல்; செய்யாத விதி மீறல்களுக்கு அபராதம் என பல்வேறு வகையில் அபராதம் விதிக்கப்படுவதால் லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக வேதனை தெரிவித்தனர். ஆன்லைனில் அபராதம் விதிப்பதால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் எனவே ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் நேரடி அபராதம் விதிக்கும் நடைமுறையை மட்டுமே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் காவல்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடமும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply