வீரராகவப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Loading

தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமானதும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற தை அமாவாசை விரதம் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் அனைத்து மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை சிறந்ததாகும். இந்த தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையலிட்டு சிறப்பு பூசை செய்து தர்ப்பணம் செய்வார்கள். அதே போல் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் அமாவாசையான இன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும்,  நேர்த்திக் கடன் செலுத்தவும் குவிந்தனர். திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கோவில் அருகில் உள்ள குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *