பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் ஒற்றை காட்டெருமை
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா,குன்னூர் வனச்சரகம், வெலிங்டன் கண்டோண்மென்ட் பகுதிக்கு உட்பட்ட,
ஜெயந்திநகர் கிராமத்தில் பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் ஒற்றை காட்டெருமையால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், நடந்து செல்வோர்,அருகில் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் காட்டெருமை தாக்கி விடுமோ என்ற அச்சத்துடன் உள்ள நிலை . யாரும் பாதிக்கபடாமல் இருக்க இந்த பகுதியில் சுற்றி திரியும் காட்டெருமை வராமல் இருக்க நீலகிரி மாவட்ட வனத்துறையும், குன்னூர் வனத்துறையும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்கள்,மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.