அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு

Loading

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அம்மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டு பேசினார்.திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு என்னெற்ற சிறப்பு திட்டங்கள் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து இன்றும் அவ்வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கி வரும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் 512 நபர்கள் திருநங்கைகளாக இத்திட்டங்களின் மூலம் பயன்பட்டு வருகின்றனர்.அடுத்த கட்டமாக மது போதைக்கு அடிமையாகி தம் வாழ்க்கையை இழக்கும் பல்வேறு நபர்களை மீட்டெடுத்து நல்வழி படுத்தும் வகையில் நமது திருவள்ளுர், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மது பழக்கம் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ளவர்களை நல்வழிப்படுத்தி சீரமைத்து ஓர் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கு தேவையான மருத்துவ வசதிகள் இம்மருத்துவ வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டுஅதற்கானசிகிச்சைமற்றும்ஆலோசனைவழங்குவதற்காகதனிபிரிவுமஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் 512 திருநங்கைகள் பயன்பெறுவர். இங்கு பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, மகளிர் சிகிச்சை பிரிவு, தோல் நோய் பிரிவு இதர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் வார 2 நாட்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள்.
மேலும் 20 படுக்கை வசதியுடன் கூடிய மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதத்திலும் சுமார் 100 முதல் 150 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வுதனை முன்னேற்ற நாள்தோறும் என்னெற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான முறையில் செயல்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்.குறிப்பாக தமிழ்நாட்டில் புறம் தள்ளப்பட்ட மற்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட கடைக்கோடி நிலையில் உள்ள மக்களுக்கு உதவி கரம் புரியும் விதமாகவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசாகவும் தமிழக முதலமைச்சர் தலைமையிலான நமது அரசு செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்களை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெற்ற திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதை பழக்க ஒழிப்பும் மறுவாழ்வு மையம் துவக்க விழாவில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் திருநங்கைள் சிறப்பு புற நோயாளி பிரிவை துவக்கி வைத்த தன் அடையாளமாக 12 திருநங்கைகளுக்கு புற நோயாளிகள் பிரிவு அனுமதி அட்டைகளை வழங்கினார்.
 இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்),ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), சந்திரன் (திருத்தணி), திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன், தலைமை குடிமை மருத்துவர் மரு.விஜயராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள், திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *