ரூ1.45 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கினார். களை பயனாளிகளுக்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் கூட்டுரவுத் துறை சார்பாக நடைபெற்ற விழாவில் ஆவடி தொகுதிக்குட்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 3 கிளைகள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று நிலுவையில் இருந்த 44 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 546 உறுப்பினர்களின் ரூ1.45 கோடி மதிப்பீட்டிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் வழங்கினார். உடன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் சி.ஆ.ப. துணை மேயர் ஸ்.சூரியகுமார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மு.முருகன், ஆவடி மாநகராட்சி பணி குழு தலலவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, மண்டல குழு தலைவர்கள் ராஜேந்திரன். திருமதி.அமுதா பேபி சேகா, திருமதி.அம்மு. திருமதி.ஜோதிலட்சுமி, துணைப் பதிவாளர்கள் கருணாகரன், காத்தவராயன், மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பிணிகள். பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.