நேரு வீதி வணிகத் திருவிழா முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
நேரு வீதி வணிகத் திருவிழா முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இந்த வணிக திருவிழாவுக்கு நேரு வீதி வணிகர் சங்க தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.புதுச்சேரி நேரு வீதியில் 5வது வணிகத் திருவிழா துவக்க விழாவை முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது வணிகத் திருவிழா நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேப் போன்று அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட அளவில் வணிகத் திருவிழா நடத்தி வாடிக்கையாளர்களுக்கு மெகா பரிசுகள் வழங்க வேண்டும் என்றார். மேலும் வணிகர் சங்க தலைவர்கள் கூறியதாவது இந்தவணிக திருவிழாவில் போட்டியின்றி குலுக்கல் முறையின்றி நிச்சய பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்படும் இதன்படி படிக்கையாளர்கள் வாங்கும் 4 கூப்பன்களுக்கு தண்ணீர் பாட்டில், 8 கூப்பன்களுக்கு 525 மி.லி, பிளாஸ்டிக் பொருள், 15 கூப்பன்களுக்கு 3லிட்டர் குக்கர், 25 கூப்பன்களுக்கு 3இன்1 காம்போ குக்வேர், 36 கூப்பன்களுக்கு குளோரி மிக்சி, 50 கூப்பன்களுக்கு மின்விசிறி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.இந்த வணிகத் திருவிழா வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி மற்றும் வணிகர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.