வீரராகவப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு :

Loading

மாதத்திற்கு 2 ஏகாதசி என்று ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகள் விரதம் இருந்தாலும் மார்கழி மாத வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. இந்த நாளில் தான் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.அதன்படி திருவள்ளூரில் புகழ் பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

108 திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. முன்தாக அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணி வரை தைலகாப்பு திரை நீக்கி, திருவடி தரிசனத்துடன் மார்கழி மாத பூஜை  நடைபெற்றது.  3 மணி முதல் 3.45 மணி வரை தனுர்மாத தரிசனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல்  திறப்பு காலை 5 மணியளவில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து வீரராகவர் கோயிலில் பன்னிரு 12 ஆழ்வார்களான  பொய்கையாழ்வார்,  பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் , மதுரகவி ஆழ்வார்,  குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பானாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *