மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் நலதிட்டம்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் நலதிட்ட உதவிகளை நேரடியாக வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் உதவிக் குழுக்களுக்கு ரூ. 27.17 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் 9 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ. 4.5 கோடி மதிப்பிலான பெருங்கடன் உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.  தீபாசத்யன்,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் நானிலதாசன்,  திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *