மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியினை தொடர்ந்து வேலூர் மாநகர் காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 1041 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 74 கோடியே 255 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்ட சட்டமன்ற உறுப்பினர்ஏ.பிநந்தகுமார், வேலூர் மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாநகர் மேயர் திருமதி சுஜாதா, 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *