இராணுவ மருத்துவ மனையில் இரத்ததான முகாம்:
இராணுவ மருத்துவ மனையில் இரத்ததான முகாம் வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் “இரத்த தானம் செய்யுங்கள் – ஒரு உயிரை காப்பாற்றுங்கள்”என்ற கருப்பொருளுடன் கூடிய இரத்ததான முகாம், மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையம், வெலிங்டன் ஸ்டேஷன் தலைமையகம், மற்றும் வெலிங்டன் கண்டோண்மென்ட் வாரியம், ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கிய சமூகத்தின் பிரிவு ,பொது மக்களின் நன்கொடையாளர்களின் செயலில் பங்கேற்பதாக உறுதி செய்யப்பட்டது.மேலும் செஞ்சிலுவை சங்கம், ரோட்டரிகிளப், மற்றும் இந்திய மருத்துவ சங்கம்,கோயம்புத்தூர் ஆகியவற்றின் ஆதரவும் அவர்களின் வளங்கள் மற்றும்
நிபுணத்துவத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல்,பாதுகாப்பான சேகரிப்பு போக்குவரத்துத்து மற்றும் சேமிப்பு வசதிகள்ஆகியவற்றுடன் எதிர்கால தேவைக்காக, 400வருங்கால நன்கொடையாளர்களின்தவுத்தளமும் மேற்கொள்ளபட்டது.
உருவாக்கபட்டது.ராணுவம்,என்சிசிமற்றும் குடிமை தற்காப்புத் துறையை சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள், கல்லூரி மாணவர்களுடன் கலந்து கொண்டு, இந்திய இராணுவத்துக்கும், குடிமக்களுக்கும், உள்ள பந்தத்தை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியின் போது ரத்தம் சேகரிக்கப்பட்டு,அரசு மருத்துவமனை ஊட்டி,அரசு மருத்துவமனை குன்னூர், மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஒப்படைக்கப்பட்டது.இம்முகாமில் ஏராளமான பொது மக்கள், தன்னார்வத் தொண்டு செய்து தேவைப்படுபவர்களுக்கு, இரத்த தானம் செய்வதை உறுதி செய்தது.