பணியில் இருந்த போது லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானதால் பரபரப்பு .
திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இங்கு திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தனது சொத்துக்களை பதிவு செய்தல் திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவண பதிவுகளை திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர் . அரசு விதிமுறைகளை மீறி நாள் ஒன்றுக்கு சுமார் 200 டோக்கன்கள் வரையிலும் பதிவு செய்ய அனுமதி உள்ளது. ஆனால் அதற்கும் மேலாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரிந்தவர்கள் என வருபவர்களுக்கு மாலை 6 மணி முதல் தட்கல் மூலமாக 50 டோக்கன்களுக்கும் மேலாக அளிக்கப்பட்டு சுமார்நாளொன்றுக்கு 10 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு லஞ்ச குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சமீபத்தில் சார்பதிவாளர் ஒருவர் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திர பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாபிடிக்கப்பட்டு.நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்த பிரகாஷ் என்பவருக்கு கூடுதல் பொறுப்பாக இணைப்பதிவாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுதற்பொழுதுசார்பதிவாளர்அலுவலகத்தில் பதிவுகள் நடைபெற்று வருகிறது. ஆவணங்கள் சரியாக இருந்தாலும் ஏதேனும் குற்றச்சாட்டை கண்டுபிடித்து அதை சரி செய்ய ஆயிரக் கணக்கில் லட்சக் கணக்கில் செலவாகும் எனவும் பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களிடம் சொல்லி மிரட்டுவதுடன் குறைந்த செலவில் செய்து தருவதாக லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிகளை முடித்து தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து இணைப்பதிவாளராக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் மீதும் லஞ்ச குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓய்வு பெற்ற பணியாளர் மணி என்பவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 100 ரூபாயை லஞ்சமாக வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. எனவே கூடுதல் பொறுப்பு வகிக்கும் பிரகாஷை பதவி நீக்கம் செய்து சார் பதிவாளர் அலுவலகத்தில் புதிதாக சார் பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.