முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை

Loading

மதுரை மாநகர் பாஜக இளைஞரணி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  இலவச கண் பரிசோதனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம மாநகர் மாவட்ட தலைவர்தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நவீன் அரசு தலைமையில்  ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அறிவுடையார் சுப்புலட்சுமி திருமண மஹால் அருகில் நடைபெற்றது. முகாமில் கண்புரை, கணினி பார்வை குறைபாடு, கிட்ட பார்வை, தூர பார்வை, வெள்ளெழுத்து பிரச்சனை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் வினோத் குமார், மாவட்ட பொருளாளர் ராஜ் குமார், மாவட்ட துணைத் தலைவர் காளிஸ் மணிகண்டன், மாவட்ட செயலாளர் நாகராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக் மணி, சேது, சரவணன் ஆரப்பாளையம் மண்டல அமைப்பாளர் ஆட்டோ பிரபு, மண்டல் நிர்வாகிகள் ரசூல், ராஜ்குமார், சதீஷ், சேகர், மயில், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா,  வர்த்தக அணி மண்டல் தலைவர் பாலச்சந்திரன், இஎஸ்ஐ மண்டல் அமைப்பாளர் செல்லத்துரை, பொறுப்பாளர் முத்து வழிவிட்டான், ஐடி விங் மாநில செயலாளர் விஸ்வநாத் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *