சேலத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 5 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா.
சேலம் முதல் அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரம் அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு ஹோமம் நடைபெற்று மூலவர் ஆஞ்சநேயருக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து 1008 வடை மாலை சூட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு துளசி மற்றும் நறுமணர் மலைகள் சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட உற்சவ வாகனத்தில் ஆஞ்சநேயர் காட்சியளிக்க சண்டா மேளம், நாதஸ்வரம் பல்வேறு இசைவாத்தியங்கள் முழங்க பெண்கள் கோலாட்டம் ஆடிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கலந்துகொண்ட பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் சடாரி மரியாதை வழங்கப்பட்டது இதைத் தொடர்ந்து திருக்கோவில் மற்றும் ஆஞ்சநேயர் நண்பர்கள் குழு சார்பில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.