பசுமை தமிழகம் 4.மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை ஊராட்சியில் உலக சாதனை படைக்கும் பசுமை தமிழகம் திட்டத்தில் 4. மணி நேரத்தில் 6.லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக கின்னஸ் சாதனை படைத்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது இவ்வுலக சாதனை மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கிவைத்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார் இதில் அவர் கூறியதாவது தமிழகத்தின் முன்னாள் மூத்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார் இதில் மதங்களை வளர்த்தால் மதம் ஆடு மாடு உயிர்பலி கேட்கும் மரங்களை வளர்த்தால் மரங்கள் மனிதர்களை வளர்க்கும் என அவர் கூறியதை நினைவு கூர்ந்து பேசி அனைவரையும் சிந்திக்க செய்தார் தமிழகத்தில் வனப்பரப்பு 27 சதவீதமே உள்ளதால் தமிழக முதல்வர் இனிவரும் 10 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு மேல் வனப்பரப்பை உருவாக்கி காட்ட வேண்டும் எனஅரசு நிலங்கள் அறநிறைலைத்துறை சொந்தமானநிலங்களெகிராமங்களில் எங்கிருந்தாலும் அப்பகுதிகளை பசுமை தமிழகமாக மாற்றும் முயற்சியிலே அடர்வணக்காடாக மாற்றி காட்டுவோம் என சூளுரை திறக்கிறார் என்பதையும் தெரிவித்தார் மேலும் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அதில் வெற்றி காணக்கூடிய அமைச்சர் என்பதையும் பேசி புகழாரம் சூட்டினார் மேலும் உலக கின்னஸ் சாதனை மரக்கன்று நடும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ,வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்,திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி,வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காந்திராஜன்,பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஐ.பி. செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் விசாகன் கூடுதஆட்சியர்தினேஷ்குமார்,அமெரிக்காவின் கின்னஸ் சாதனை நடுவர்கள் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலக ஆணையாளர் அரசு துறை சார்ந்த ஊழியர்கள் கழக நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் ஊர் பொதுமக்கள் ஆண் பெண் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.