அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (21.12.2022) இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன். ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி.மாலதி கணேசன். வருவாய் கோட்டாட்சியர் பா.வினோத்குமார். வட்டாட்சியர் நடராஜன். ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருமதி.கங்கா பாய். ரவி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.