பூவை மூர்த்தியார் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க முதல்வருக்கு புரட்சி தமிழகம் கோரிக்கை

Loading

பூவை மூர்த்தியார் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க முதல்வருக்கு புரட்சி தமிழகம் கோரிக்கை பூவை மூர்த்தியார் அவர்களின் பிறந்த நாள் ஏப்ரல் – 10 அரசு விழாவாக அறிவித்து அண்ணாரின் முழுஉருவ சிலையை அரசு நிறுவ வேண்டும் என்று ஏர்போர்ட் மூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார் சம காலத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட தீண்டாமையை சமூகத்திலிருந்து அகற்ற பெரும் பாடுபட்டவர். பட்டியல் சமூக மக்களின், தலைநிமிர்விற்காக தன் வாழ்நாளை அற்பணித்தவர். சாதிய கொடுமைகளை களைந்து சமூக அமைதியை நிலைநாட்ட அரும்பாடுபட்டவர். பல பட்டியல் சமூக இளைஞர்களுக்கு கல்விக் கண் திறந்தவர். பல ஆயிரம் நபர்களை பட்டதாரிகளாகவும், சட்டம் பயின்றவர்களாகவும் மாற்றியவர். எந்த சமூக அரசியல் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பாக, சாரை சாரையாக விடியற்காலை முதலே அவரை சந்திக்க ஆயிரக்கணக்கான மக்கள் அவர் இல்லம் தேடி சென்று தங்களின் குறைகளையும், சிக்கல்களையும் அவரிடம் கூறி அதற்குண்டான தீர்வுகளை அடைந்து செல்வர். இது தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று.தமிழகத்தில் வாழும் பட்டியல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு காவல் தெய்வமாக இன்று வரை போற்றப்படும் பூவை மூர்த்தியார் அவர்களின் சமூக உணர்வையும், பணிகளையும் போற்றும் வகையிலும் தமிழக பட்டியல் சமூக மக்களின் உணர்வுகளை போற்றும் வகையிலும் அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 10-ஐ அரசு சார்பில் அரச விழாவாக அனுசரிக்க ஆணையிட்டு அண்ணாரின் முழு திருஉருவசிலையை அரசு சார்பில் வைத்து அஞ்சலி செலுத்த சமூக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *