96 வது மாநில மத்திய செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
சேலம் தமிழ்நாடு கூட்டுறவு தணிகைத் துறை அலுவலர் சங்கம் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் மற்றும் 96 வது மாநில மத்திய செயற்குழு கூட்டம் அண்ணா பூங்கா அருகில் உள்ள தமிழ் சங்க மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை நிலைய செயலாளர் அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கௌரவத் தலைவர் செல்வம், நிறுவனத் தலைவர் கோவிந்த இராசன், பச்சையப்பன், ஜோதிராஜ், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் சண்முகசுந்தரம், துரைக்கண்ணன், பிரபாகரன், பெரியசாமி, காளியப்பன், மாதர்சாமி, சோமு, விஜயகுமார், கணேசன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கங்கா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசு நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தணிகை துறை உள்ளடங்கிய ஐந்து துறைகளின் தலைமை தணிகை இயக்குனர் பணியிடத்தை உருவாக்கி தணிகை துறைக்கே வலு சேர்த்த தமிழக முதல்வர் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், அரசு பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இது போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மண்டல செயலாளர்கள் ,சட்டப்பிரிவு செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செய்