சர்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டு கரும்பு அரவையை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டு கரும்பு அரவையை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, தே.மதியழகன், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அ.மீனாபிரியாதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.இராஜேந்திரன், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஏ.ஆர்.இராஜேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.