மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு ஆர்கனைஷேசன் 16வது சேவை திட்டம் .

Loading

மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு ஆர்கனைஷேசன் 16வது சேவை திட்டம் மற்றும் தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு தினவிழா பழையநத்தம் ரோடு பால மந்திரம் மேல்நிலைப் பள்ளியில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோ தளபதி அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் பால மந்திரம் பள்ளிக்கு நவீன தொழில்நுட்ப கற்பித்தல் உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாக சிறப்புரையாற்றினார். பள்ளி பொருளாளர் ரா. சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். HCPO நிறுவனர் & தலைவர் ந. அசோகன் பள்ளிக்கு கணினி உபகரணங்கள் வழங்கி அறிமுக உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை சாய்கீதா, ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை சி. சீனிவாசன், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் ஜெ. மூவேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) ச. குமரவேல், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வே. ஜெயராம பாண்டியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் பாலமுந்திர மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *