குன்னூர் காவல் துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் காவல் துறை மற்றும் போக்குவரத்து  காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த சாலை விழிப்புணர்வு பேரணி  குன்னூர் பெட்போர்டு பகுதியில்  துவங்கி குன்னூர்  வரை நடைப்பெற்றது.இந்த சாலை விழிப்புணர்வு பேரணியில்
குன்னூர்  காவல் துணை கண்காணிப்பாளர்
யசோதா (பொறுப்பு) அவர்கள்,நகராட்சி ஆனையாளர் கிருஷ்ண மூர்த்தி  அவர்கள்,காவல் துறை ஆய்வாளர்கள்   பிரிதிவிராஜ் அவர்கள்,
 முத்து கனேஷ் அவர்கள்,
கவிதா அவர்கள் , உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் அவர்கள்,  சிறப்பு காவல் ஆய்வாளர்கள் ஜார்ஜ் அவர்கள் , செல்வராஜ் அவர்கள் ,காவல் துறையினர் பள்ளி மாணவ மாணவிகள்,
இரு சக்கர வாகன  ஒட்டிகள்,மற்றும்
பொது  மக்கள் கலந்து கொண்டனர். இந்த சாலை விழிப்புணர்வு பேரணியில்
வசதியற்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை சார்பாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.
காவல் துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகதிற்கு ஏற்ப இரவு பகல் பாராமல் பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்து மிக சிறப்பாக பணியாற்றி வரும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களுக்கும் ,
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்றி வரும் நீலகிரி மாவட்ட காவல் துறையினர் அனைவருக்கும் ,
பொது மக்கள் சார்பாகவும்,சமூக ஆர்வலர்களின் சார்பாகவும், செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *