பாலக்கோடு அருகே சாலையோரம் கவிழ்ந்த தனியார் பஸ்-10-பேர் படுகாயம்.
![]()
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே
கோடியூர் என்ற இடத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளிலிருந்து சேலம் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது, குள்ளனூரை சேர்ந்த ரவி (வயது. 49)ஓட்டுநராகவும், கெங்கு செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (வயது. 31) நடத்துனராக உள்ளனர். பேருந்து
கோடியூர்அருகே வந்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது.27) என்பவர் மொபட்டில் வந்து கொன்டிருந்தார், அவர் மீது மோதமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார் , பிரேக் நிற்காமால் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, பேருந்தில் 19 பேர் பயணம் செய்திருந்த நிலையில் மாரண்டஅள்ளியை சேர்ந்த சாந்தி (வயது. 31), பரமேஸ்வரி (வயது.35) மற்றும் கோடியூரை சேர்ந்த (வயது.27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,
திருப்பதியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

