புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி அடிக்கல் நாட்டி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பொலிவுரு நகர திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டை தொகு மடுவுபேட் பகுதியில் சலவையாளர் நகரில் உள்ள சலவைத் துறை பிரெஞ்சு முகமை(AFT) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ரூ 2.08 கோடி மதிப்பீட்டில் சலவைத் துறையை புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு முதலமைச்சர் N.ரங்கசாமி அடிக்கல் நாட்டி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மு.வைத்தியநாதன், தலைமை செயல் அதிகாரி டாக்டர் அருண், I.A.S. மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.