கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சேலம் பைபாசில் உள்ள தனியார் மண்டபத்தில்
மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியரின் நூற்றாண்டு விழா , பூத் கமிட்டி அமைப்பது , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிப்பது , கழக ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்புரையாற்றினார்இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செங்குட்டுவன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆசிரியர் சந்திரன், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன்,எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நரசிம்மன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர்கள் அமானுல்லா, சந்தோஷ்குமார், செந்தில்குமார், தம்பிதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் எஸ்.எஸ் சங்கர்,தாபா சங்கர், பழனி, வர்த்தக அணி அமைப்பாளர் காமராஜ், தொண்டரணி அமைப்பாளர் தெய்வம், அவைத்தலைவர் தணிகை குமரன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன் பாண்டியன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜாவித், மருத்துவர் தென்னரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி திருப்பதி, சின்னத்தாய், கலீல், மணிகண்டன்,மகேஸ்வரி சங்கர், வெண்ணிலா முருகேசன், ராமமூர்த்தி, பெருமாள், பேரூராட்சி துணை தலைவர் தீபக், பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன்,கனகேஷ்வரி, மற்றும்
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.