கார்த்திகை தீபத் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Loading

இத்திருக்கோவில்  வைகாசி விசாகத் திருநாள் சிறப்பாக நடைபெறும். கார்த்திகைத் தீபத் திருநாளில் திருமலைக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  திருக்கோவில் தலைமை அர்ச்சகர் திருமேனிநாத பட்டர் (எ) ரமேஷ் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள்  குழுவினர் திருமலைக்குமாராசாமிக்கு அபிஷேக ஆராதனைகளை நடத்தினர். மாலையில் மலையில் தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு உற்சவர் திருமலைக்குமாரசாமி மற்றும் வள்ளி தெய்வானை சமேத திருமலை சண்முகர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு திருமலைக்குமாரசாமியை தரிசனம் செய்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *