வடசென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் .

Loading

பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மாளிகையிள் நடைபெற்றது.
பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி எஸ்.ரபியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார்,மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஹேமலதா ஆகியோர்  வருகைதந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.
மகளிர் அணி மாவட்ட செயலாளர் சொர்ணலதா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி தொடங்கியதை அடுத்து பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட  மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார்,மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஹேமலதா ஆகியோர் கட்சி வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் மாநில பொதுகுழு உறுப்பினர் மோகனா,மாவட்ட பொதுசெயலாளர்கள் ஜெய்கணேஷ்,எஸ்.ஆர்.செந்தில்,மகளிர் அணி மாவட்ட பொதுசெயலாளர்கள் அமுதா,முத்துசெல்வி,மகளிர் அணி மாவட்ட செயலாளர் சொர்ணலதா மற்றும் துறை கணேஷ் மாவட்ட நிர்வாகிகள்,மண்டல் நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பலர் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *