நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை .

Loading

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை .தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், எஸ்.ஐ வெங்கடேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருங்காடு அருகே முத்துக் கொட்டாய் பகுதியில் உள்ள பாறை இடுக்கில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஏர்கன் இரண்டும் மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மாரண்டஅள்ளி பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவில் விலங்குகளை வேட்டையாட இவ்வகை துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவதாகவும், மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் இருக்க பாறை இடுக்கில் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.காட்டு விலங்குகளை வேட்டையாடும் மர்ம நபர்களை மாரண்டஅள்ளி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *