பால் உற்பத்தியில் முன்னணி நாடாக உருவெடுக்க நன்கு இந்தியா தயாராகி வருகிறது
பால் உற்பத்தியில் முன்னணி நாடாக உருவெடுக்க நன்கு இந்தியா தயாராகி வருகிறது திரு.பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.
தேசிய பால் தினத்தை நவம்பர் 26-ஆம் தேதி நாடு கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. ஏனெனில் நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பெருமைக்குரிய டாக்டர்.வர்கீஸ் குரியனின் 101-வது பிறந்த தினம் இதுவாகும். உலக பால் உற்பத்தி வரைபடத்தில் இந்திய பால் உற்பத்தித்துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், 2020-21-ஆம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டன் மூலம் நாட்டின் பால் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக பால் உற்பத்தியில் இந்தியா 23 சதவீதம் உற்பத்தி செய்து முக்கியப் பங்காற்றி வருகிறது. 2020-21-ஆம் நிதியாண்டில் நாட்டில் தனிநபருக்கு சராசரியாக 427 கிராம் பால் கிடைத்தது. இது உலக சராசரியான 394 கிராம் என்பதை விட அதிகமாகும்.
இந்திய பால்துறை பெருமளவும் கூட்டுறவு அமைப்புகளின்கீழ் வருகிறது. பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதில் கூட்டுறவு அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. பால் கொள்முதல் மற்றும் விற்பனையை சம்பந்தப்பட்ட பகுதிகளில் இந்த கூட்டுறவு அமைப்புகள் மேற்கொள்கின்றன. சில முன்னணி கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனங்கள், செயல்திறனிலும், லாபத்திலும் தனியார் நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு அமைப்பான அமுல், கூட்டுறவு மாதிரியின் சக்திக்கும், வெற்றிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
பெருந்தொற்றுக் கால ஊரடங்கின்போதும், அதற்கு பின்னரும் அரசும் பால் கூட்டுறவு நிறுவனங்களும், பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் அதிகளவு ஆதரவு அளிப்பதை குறிப்பிட வேண்டும். பெருந்தொற்று காலத்திலும் கூட்டுறவு அமைப்புகள் தொடர்ந்து பால் கொள்முதலை அதிகரித்தன. 2020-21-ஆம் ஆண்டில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கொள்முதல் 7.9% அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு கடன்கள் உள்ளிட்ட திட்டங்கள், கடந்த 2 ஆண்டுகளில் இத்துறை தொடர்ந்து வலுவான மீட்சித் தன்மையுடன் இருக்க உதவியுள்ளது.
கால்நடைகளின் திறன் மிக்க மேலாண்மைக்காக இ-கோபோலா என்ற டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 270 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால் மற்றும் பால் துணைப்பொருட்கள் ஏற்றுமதியிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக திகழ்கின்றன. ஆசிய, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்திய பால் பொருட்களின் சந்தை அதிகரித்து வருகிறது.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் கால்நடை விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களால் பால் துறையின் மேம்படும். எனவே, பால் பொருட்கள் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் என்ற வலுவான நம்பிக்கையுடன் டாக்டர்.குரியனின் இந்த 101-வது பிறந்த தினத்தில் நாம் செயல்பட்டு வருகிறோம்.