நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்…
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள் ரப்பர் பால் சேகரித்தல், ஒட்டுக்கரை வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 40 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அரசு ரப்பர் கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அந்த 40 ரூபாய் சம்பள உயர்வை வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது…