ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சேலம் வடக்கு மாவட்டம் பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியம், குரால் நத்தம் ஊராட்சியில்,ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.ஒன்றிய அமைப்பு செயலாளர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்,
மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் அருண்,செல்வம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாமக மாவட்டசெயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.ஒன்றிய மகளிர் சங்க செயலாளர் வனிதா,ஒன்றிய இளம்பெண்கள் சங்க தலைவர் சாந்தி,ஒன்றிய துணை தலைவர் மணி,ஒன்றிய மாணவர் சங்க தலைவர் தங்கதுரை,தொழிற் சங்க ஒன்றிய தலைவர் அன்பழகன்,ஒன்றிய
பாட்டாளி ஊடக பேரவை தலைவர் ரமேஷ்,கிளை செயலாளர் சங்கர் வெங்கடாஜலம், கிருஷ்ணன்,இராஜா முன்னோடிகள், கிளை நிர்வாகிகள், கிளை மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாமக சார்பில் திண்ணை பிரச்சார குழுக்களை அமைத்து 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய சுகாதார திட்டம், அதிநவீன மருத்துவமனை கொண்டு வந்தது,- போலியோ நோய் ஒழித்தது போன்ற சாதனைகளை கூறி 2026 இல் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சி அமைய பாடுபட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காவிரி உபரி நீரை மேட்டூரிலிருந்து பனமரத்துப்பட்டி ஏரியில் நிரம்பி சேலம் மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டும். சாமந்தி, சம்பங்கி, அரளி, மல்லிகை என்று ஏராளமான பூக்களின் சாகுபடி இருக்கு. ஆனால் அதை பத்திரப்படுத்தி, சந்தைப்படுத்த தேவையான குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்
கத்திரி, வெண்டை, அவரை, பயறு வகைகள் என்று அனைத்தும் விளையும் செல்வ செழிப்பான பனமரத்துப்பட்டியில் விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு உழவர் சந்தை அமைக்க வேண்டும். போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறுவப்பட்டது.