ஆற்காடு வட்டாரத்தில் உள்ள 39 தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்ச்சி துவக்கம்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக ஆற்காடு வட்டாரத்தில் உள்ள 39 தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியினை துவக்கி வைத்தார்கள். உடன் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், செயல் அலுவலர்கள் ஜெயக்குமார். நித்தியானந்தம், வாசுதேவன். அன்பரசன், செல்வி.கீர்த்திகா மற்றும் பலர் உள்ளனர்.