மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Loading

சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டையில் தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி*

காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் தேசிய மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வைத்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்புரையாற்றினார். மாணவ மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாரும் , மாணவி கார்த்திகா “மாற்றத்திற்கான திறன் மாற்றுத்திறன். மாற்றுவோம் உலகை புது தோற்றத்துடன்” போன்ற வாசகங்களை கூற அனைவரும் முழக்கமிட்டார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராம மக்களிடம் விழிப்புணர்வு பேரணியின் மையக் கருத்தான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் சார்பில் அத்தகைய குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டது. இணைவோம் மகிழ்வோம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது. ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மீனாட்சி, ராஜபாண்டி, அமலாதீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *