4,000 மாணவ, மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முகாம் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவ, மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர்  பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு. இரா.கண்ணன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல்
மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,
அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *