திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Loading

திருவள்ளூர் நவ 07 :
ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆவடி ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் கனகம்மா சத்திரம் பகுதியில் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாண்டி ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ் பி., பா.சிபாஸ் கல்யான் பரிந்துரையின் பெயரில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்  இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *