காரணி ஊராட்சி பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக தண்ணீர் செல்லும் பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூர் நவ 07 : 
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட காரணி ஊராட்சி பகுதியில் செல்லும் ஆரணியாற்றின் குறுக்கே 150 மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகப்படியான தண்ணீர் செல்லும் பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு தடையின்றி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட காரணி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழை பெய்ததன் காரணமாகவும், ஆந்திர மாநிலம் நகரியிலிருந்து வருகின்ற அதிகப்படியான மழை வெள்ள நீரின் காரணமாகவும் இப்பகுதியில் உள்ள தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் வடியாத நிலையில் செல்வதால்; தொடர்ந்து, இத்தரைப்பாலத்தை கடந்து செல்லும் பல்வேறு ஊர் பொதுமக்களின் பொது போக்குவரத்து  பாதிக்கப்பட்டு வந்தது.இதனால் தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட மேம்பாலம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், இந்த பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் இத்தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்லும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து இத்தரைப்பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்களின் பொது போக்குவரத்திற்கு எவ்விதத்திலும் தடை ஏற்படாத வகையில் பல்வேறு துறை அலுவலர்களோடு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்தாலோசனை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆரணியாறு வடிநில கோட்டம் சென்னை செயற்பொறியாளர் ஜெயகுமாரி, உதவி பொறியாளர் புவனேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கே.ஆண்டி, உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply