திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  இந்தி எதிர்ப்பு விளக்க துண்டறிக்கை    வழங்கும் நிகழ்வு

Loading

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  இந்தி எதிர்ப்பு விளக்க துண்டறிக்கை    வழங்கும் நிகழ்வு தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு தொடர்ச்சியாக சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில்  மாவட்டச் செயலாளர் மயிலை த. வேலு  தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.கருணாநிதி
 பகுதிச் செயலாளர் கே ஏழுமலை  ஆகியோரின் ஆலோசனைப்படி
வட்ட செயலாளர்
பி. மாரி  அவர்களின் தலைமையில்
133 வது ( அ ) வட்டத்தின் சார்பில்  தியாக ராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து  புறப்பட்டு வட்டத்திற்குட்பட்ட ரங்கநாதன் தெரு. நார்த் உஸ்மான் சாலை.
நடேசன் தெரு.
ராமேஸ்வரம் தெரு
மங்கை தெரு
தியாகராய நகர்  பேருந்து நிலையம் உட்பட்ட பகுதிகளில்
50க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுடன்  ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே என்ற கோஷங்கள் எழுப்பி இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்கினார்கள்   மேலும் இந்நிகழ்வில்  மாவட்ட,பகுதி,வட்ட கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் மகளிர் அணி நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டனர்…
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *