அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்டுக்கு ஆண்டுக்கட்டணம் ரூ 4 லட்சமா?  அழகிரி கேள்வி

Loading

சென்னை, அக்- 5

அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்பிபிஎஸ் சீட்டுக்கு  ஆண்டுக்கு 4 லட்சம் கட்டணமா என்று அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை

மருத்துவப்படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பு ஆண்டுக்கு ரூ.25லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணம் வரை வசூலிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தனியார மருத்துவக் கல்லூரிகளும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களும் மாணவர்களிடம் கூடுதலாகப் பணம்கேட்பதால், பல மாணவர்களுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது, மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதிக கட்டணம் காரணமாக படிக்க முடியாத  சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த மருத்துவக்கல்லூரிஅரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கடலூர்அரசு மருத்துவக்கல்லூரி என பெயர;மாற்றப்பட்டுள்ளது. எனினும், இங்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சமும், பல்மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.2013 ஆம் ஆண்டு இந்த கல்லூரியை அரசு ஏற்றது. அதன்பிறகு கட்டணத்தைக்குறைப்பதாக அரசு அறிவித்தது. இதுவரை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவம்படிக்க வேண்டும் என்ற கனவுக்கு முட்டுக்கட்டை போடும் நீட்தேர்வையும் தாண்டி, தமிழகமாணவர்கள்  கஷ்டப்பட்டு மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெறுகிறார;கள். அவர்களில் பலர்ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்களாக  இருக்கிறார்கள்.எனவே, அவர்களது எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில்நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தையே, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கவேண்டும். அதேபோன்று, தமிழக அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, சுயநிதி மற்றும் நிகர்நிலைபல்கலைக்கழகங்கள் வசூலிக்கின்றனவா? என்பதை அரசு கண்

0Shares